Disclaimer: This Blog, its owner, creator & contributor is neither a research analyst nor an Investment Advisor and expressing opinion only as an Investor in Indian equities.He/She is not responsible for any loss arising out of any information,post or opinion appearing on this blog.Investors are advised to do own due diligence and/or consult financial consultant before acting on any such information

Monday 30 November 2015

வாழ்க்கையை தொலைத்தவன்

அந்த சிறுவன் ஒரு நாள் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது சாலையில் ஒரு 500 ரூபாய் நோட்டு கிடப்பதை பார்த்தான். அவனுக்கு உற்சாகம் கரை புரண்டது. யாரோ தொலைக்கும் பொருள், எந்த உழைப்பும் இல்லாமல் தனக்கு சொந்தமானதில் சுகம் கண்டான்.

அன்று முதல் எதும் தரையில் கிடக்கிறதா என்று குனிந்து பார்த்துக்கொண்டே நடந்தான். அறுபது வருடங்கள் கடந்தன. அவன் அப்படியே இருந்தான்
இதில் அவனுக்கு கிடைத்தவை 1600 ரூபாய், 2 தங்க மோதிரங்கள், 4 கொலுசுகள் நிறைய காலி பர்ஸ்கள்

ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூரியோதயங்கள், 600 வானவில் காட்சிகள், ஆயிரக்கணக்கான மலர்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள்.

வாழ்க்கையை தொலைத்தவன், அதை மீட்பதற்கு வாய்ப்பே இல்லை
அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள் இல்லையென்றால் வாழ்க்கையை பாருங்கள் வாழ்ந்து பாருங்கள்.....

நாமும் அப்படித்தான் நிறைய விஷயங்கள் விலையில்லாமல் இனாமாக கிடைக்குமென்றே பொழுதுகளையும் பொருட்களையும் வர்த்தகத்தில் தொலைத்துவிட்டோம்....

No comments:

Post a Comment