Disclaimer: This Blog, its owner, creator & contributor is neither a research analyst nor an Investment Advisor and expressing opinion only as an Investor in Indian equities.He/She is not responsible for any loss arising out of any information,post or opinion appearing on this blog.Investors are advised to do own due diligence and/or consult financial consultant before acting on any such information

Friday 6 March 2015

தவறாக பயன்படுத்திய கத்தி

அனைவருக்கும் வணக்கம் .

இந்த கத்தி - காய்கறி வெட்டவும் உதவும் ஆளை கொல்லவும் செய்யும் நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை பொருத்து.
WEBSITE உருவாக்கத்தின் நோக்கம் , MARKET-ல் உள்ளே நுழைந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் TRADE செய்தவர்களுக்கும் , செய்து கொண்டிருப்பவர்களுக்காக மட்டுமே.

உங்களையே நீங்கள் தொலைத்துவிட்டு தேடும் பகுதி ....... ஆசையில் உள்ளே நுழைந்துவிட்டு உங்களையும் உங்கள் குடும்பத்தின் எதிர் காலத்தையும் நிர்ணயிக்கும் இடம்  தான் ஷேர் மார்க்கெட் !!!!



என்ன இது ஆரம்பத்திலேயே இப்படி சொல்கிறாரே என்று வருத்தப்பட வேண்டாம்... இதுவரை "SHARE MARKET" சென்று TRADE செய்தவர்களின் நிலைமை இது ... 

ஆனால் எவ்வித பயம் இல்லாமல் TRADE  செய்ய நீங்கள் கற்றுகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. பல பேர் SHARE MARKET-ல் TRADE செய்து எனக்கு LOSS ஆய்டுச்சுன்னு சொல்வாங்க அவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டியது, "நீங்க SHARE TRADING-ல் இதுவரை என்ன கற்று கொண்டீர்கள் ?, என்று தான். 99 சதவிகிதம் பேர் TV,PAPER,BROKER கொடுக்கும் TIPS-ஐ வைத்துதான் TRADE செய்கிறார்களே தவிர,அவர்கள் சொந்தமாக யோசிப்பது கிடையாது...

இழந்த முதலீட்டை மிக விரைவில் TRADE செய்து எடுக்க நினைப்பது , அவ்வளவு சுலபம் இல்லை.... அதே மாதிரி தன்னுடைய தேவைகளை  கருத்தில் கொண்டும் TRADE செய்யக்கூடாது

நிறைய வழி இருக்கிறது நஷ்ட்டம் இல்லாமல் TRADE செய்ய ........
முதலில் கற்றுக்கொள்ளுங்கள் பிறகு TRADE செய்யலாம்...
ஒன்றே ஒன்றை மட்டும் யோசியுங்கள் "இதில் யார் யார் லாபம் பார்க்கிறார்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று " அனைவரின் LOSS- யும் ஒரு சிலர் PROFIT ஆக்குகிறார்கள்... அது எப்படி?
எதை எதை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் சொல்லித்தருகிறோம்(தற்சமயம்  இல்லை )...


F & O -ன் BASIC கூட தெரியாமல் இருக்கும் BROKER -கள்  EQUITY பற்றி கூட  ஒன்றுமே சொல்லாமல் நேரடியாக உங்களை F&O- வில்  TRADE செய்யவைப்பார்கள் . புதிதாய் வரும் TRADERகளுக்கு MARKET RISK-ஐ  புரிய வைக்க இங்கே யாரும் இல்லை. வந்தவரை லாபம் என்று கமிஷனுக்காக இன்று நிறைய BROKER கள் இருக்கின்றனர் ,அதே மாதிரி எப்போதும் BROKERகளையே  குறை  சொல்லகூடாது.. முதலீடு செய்யும் TRADER கள்  தான் யோசிக்க வேண்டும் ....

தன்னால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் தொடர்ந்து முதலீடு செய்து  கொண்டே போகும் TRADER கள் நிறைய இருக்கின்றனர் ... அவர்கள் இழப்பது முதலீட்டை மட்டுமல்ல வாழ்க்கையையும் தான் ....

வாங்க பங்குசந்தையில் ஈஸியா ஜெயிக்கலாம் என்று கூறி இன்று கிடைச்சதையெல்லாம் விற்று காசாக்க ஒரு  கூட்டமே இருக்கு ... ரொம்ப ரொம்ப கவனத்துடன் இருங்கள் ....

ரோட்டில் இரண்டு பைத்தியகாரர்கள் போய் கொண்டு  இருக்கிறார்கள் , இரண்டு பேரிடமும் கருத்து கேளுங்கள் NIFTY-ன் போக்கை....
ஒருவர் மேலே என்பார்  ஒருவர் கீழே என்பார்  .... ஆக ஏதோ ஒரு பைத்தியம் சொல்வது கண்டிப்பா நடக்கும் ...  யார் வழியில் செல்வது ?

இலட்சத்தில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து TRADING-ல் வெற்றியோடு இருப்பார்கள் , அவர்களை கண்டுபிடித்து (கொஞ்சம் சிரமமான வேலைதான் )அவர்கள் வழியில் செல்லுங்கள் ....
தேடுங்கள் விடை கிடைக்கும்


No comments:

Post a Comment